6 மாத காலம் சுவாமிகளை போய் பார்த்து பலகாரம் ஊட்டிவிட்டு வந்தேன். பிறகு என்னை சென்னைக்கு மாற்றி விட்டார்கள். ஆனால் என் மனம் எல்லாம் தனுஷ்கோடியையே சுற்றி வந்தது. 6 மாதத்திற்குப் பின் மீண்டும் திருச்சிக்கு மாற்றினார்கள். அங்கு சென்றதும் முதல் வேலையாகச் சென்று சுவாமிகளை மனம் குளிரத் தரிசித்தேன். அவரை என்னோடு திருச்சிக்கு அழைத்து வந்தேன். திருச்சியில் உள்ள ரெயில்வே காலனியில் எனக்கு வீடு ஒதுக்கப்பட்டது. அங்கு ஆஞ்சனேயர் மற்றும் கருடாழ்வார் கோவில் உள்ளது. சுவாமிகள் தமது தவத்துக்காக அந்த இடத்தை தேர்ந்தெடுத்தார். அவரை தரிசிக்க பக்தர்கள் வரத் தொடங்கினார்கள்.”சுவாமிகள் எனக்கு மட்டுமோ அல்லது வேறு எந்த தனி மனிதருக்கோ சொந்தம் அல்ல” உலகத்துக்கு சொந்தம்.

அவர் சொல்லி நிறுத்தியதும் அவரது இரட்டை குழந்தைகள் (மகள்கள்) லட்சுமி, வசந்தா ஆகியோர் சுவாமிகளைப் பற்றி பாசத்தோடு நினைவு கூர்ந்தார்கள்
சுவாமிகள் எங்களை எல்லாம் ”தாத்தா... தாத்தா” என்றுதான் கூப்பிடுவார். அந்த சமயத்தில் நாங்கள் வறுமையில் இருந்தோம். சுவாமிகள் நமக்கு உதவக்கூடாதா என்றுகூட நாங்கள் ஒரு சந்தர்ப்பத்தில் நினைத்தது உண்டு. அது சுவாமிகளுக்கு தெரிந்து விட்டது போலும். எங்கள் தாயாரை மடியை வரித்து பிடிக்கச் சொல்லி தனது அங்கியில் கைவிட்டு 4முறை காசுகளை அள்ளி அள்ளிக் கொடுத்தார். இவை எல்லாம் அப்போது இருந்த காலணாக்கள். எங்களுக்கு ஒரே வியப்பு. இதை எல்லாம் இத்தனை நாளும் அவர் எங்கே வைத்திருப்பார்? நடந்தால் சப்தம் கேட்டு இருக்க வேண்டுமே!

தரைக்குள் காசுகள்!
இந்த வியப்பில் மலைத்துப் போய் இருக்கும் போதே மேலும் ஒரு வியப்பு. தரையைத் தோண்டும்படி கூறினார். ஆவலோடு மண்ணைத் தோண்டினோம். அங்கும் காசுகள். அவற்றை எடுத்து அம்மாவின் மடியில் போட்டோம். அந்த சமயத்தில் அப்பா வீட்டில் இல்லை. அந்த பணத்தைக் கொண்டு கடன்களை அடைத்தோம். கொஞ்சம் பணம் மீதி இருந்தது.

அப்பா வந்ததும் இந்த அதிசயத்தை பரபரப்போடு கூறினோம். ஆனால் அவரோ எங்களைக் கோபித்துக் கொண்டார். ”சுவாமிகளுக்கு எதை எப்போது யாருக்கு எந்தளவுக்குச் செய்ய வேண்டும் என்பது தெரியும். மீதியுள்ள பணத்தை அவர்களிடம் கொடுத்து விடுங்கள்” என்று உத்தரவிட்டார். ஆனால் சுவாமிகள் அந்த பணத்தை ஏற்கவில்லை. ”அம்மாவிடமே இருக்கட்டும்” என்று கூறி விட்டார்கள். அன்றையில் இருந்து சுவாமிகளிடம் நாங்கள் எதையுமே கேட்பது இல்லை. அதன்பிறகு எங்கள் குடும்பம் எல்லா வகையிலும் நல்ல நிலையிலும், நிம்மதியாகவும் இருந்து வருகிறது என்று கூறினார்கள்.

வரதராஜீலுவின் 2வது மகன் ராமகிருஷ்ணன்.
சுவாமிகளின் சாப்பாட்டு முறை பற்றி தமது வியப்பை வெளியிட்டார். ஊட்டிவிட்டால் மட்டும் இரண்டு கவளம் சாப்பிடுவார். இலையில் போட்டு வைத்தாலோ உணவை கையில் தொடாமல் 3முறை ஆசிர்வதித்து விட்டு ”பரிபூரணம்” என்று 3 தடவை கூறிவிட்டு எழுந்து விடுவார். வயிறாரச் சாப்பிட்டதை போன்ற திருப்தி அவர் முகத்தில் தென்படும். அவர் திருச்சியில் இருந்த போது சதா சர்வகாலமும் அனுமன் கோவிலில் ஒற்றைக்காலில் நின்று தவம் செய்த கோலத்தில் காட்சி அளிப்பதைத்தான் கண்டு உள்ளோம்.

வித்தியாசப் பேட்டி!
திருச்சியில் கோடி சுவாமிகள் 5 ஆண்டுகளுக்கு மேல் இருந்துள்ளார். அந்த கால கட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் வீடுகளுக்கு விஜயம் செய்துள்ளார். அவரது காலடி தங்கள் இல்லத்தில் படவேண்டும் என்று விரும்பி அழைக்கும் பக்தர்களின் வீடுகளுக்கு அவர் செல்லத் தவறியது இல்லை. 

Read more »


கப்பல் வந்தது!
சுவாமிகள் என் வீட்டுக்கு வருவதாகச் சொன்ன பவுர்ணமி நாளும் வந்தது. ஒன்றரை மாதமாக தாமதமாகவே வந்து கொண்டிருந்த தனுஷ்கோடி ரெயில் அன்று வெகு சீக்கிரமாகவே வந்து விட்டது. ஏழரை மணிக்கு சுவாமிகளுக்கு பலகாரம் ஊட்டினேன். ஒன்பதரை மணிவரை சுவாமிகள் என்னிடம் எதுவுமே பேசவில்லை. எனக்கு பயமாகப் போய்விட்டது. சுவாமிகள் என்னுடன் வரமறுத்து விடுவாரோ என்று நினைத்துக்கொண்டு இருக்கும் போது கண்களை மூடிய நிலையில் சுவாமிகள் பேசினார். ”கப்பல் வருகிறதா பார்” என்றார்.

நான் எழுந்து சென்று கிழக்குப் பக்கமாகக் கூர்ந்து கவனித்துப் பார்த்தேன். கப்பல் வந்து கொண்டு இருப்பது தொலைவில் புள்ளியாக தெரிந்தது?” கப்பல் வருகிறது சுவாமி” என்றேன்.
”சரி நீ போய் அந்தோணியார் கோவிலைச் சுற்றி வந்து பிரார்த்தித்து விட்டு வா” என்றார்.

மகத்துவம்
எனது கை கால்கள் லேசாக நடுங்கின. தட்டு தடுமாறிச் சென்று கோவிலைச் சுற்றி வந்து தரையில் நீள விழுந்து கும்பிட்டேன். இதைப் பார்த்த பாதிரியார். ”ஏன் இப்படி விழுந்து கும்பிடுகிறீர்கள்?” என்று கேட்டார். ”சுவாமிகள் உத்தரவு” என்று கூறினேன்.
“ஓ! அவரா மகத்தானவர்” என்று கூறினார்.
நான் மீண்டும் சுவாமிகளிடம் வந்தேன். புறப்படுவோம் என்று கூறியபடி மேடையை விட்டு இறங்கி வந்தார். நடக்க ஆரம்பித்தார். எனக்கு ஒரே ஆனந்தம். எங்களைத் தொடர்ந்து சிவப்பு நிறத்தில் ஒரு நாய் ஓடி வந்தது.

சுவாமிகள் நின்றார். நாயை ஏறிட்டு நோக்கினார். நாயும் நின்றது. “நான் சென்று வருகிறேன். நீ இங்கேயே இருந்து, காவல் காப்பாய்“ என்று சொன்ன மறுவிநாடி நாய் திரும்பி ஓடிவிட்டது.

நாங்கள் ரெயிலில் ஏறி அமர்ந்தோம். அதில் எங்களைத் தவிர ஏறத்தாழ 50 பேர் இருந்தனர். மதியம் 12 மணிக்கு ரெயில் புறப்பட “பெல்“ அடித்தார்கள். உடனே எங்களைத் தவிர அந்தப் பெட்டியில் இருந்த அத்தனை பேரும் மடமடவென்று இறங்கி அடுத்த பெட்டியில் ஏறிக் கொண்டனர். சுவாமிகள் மெல்ல சிரித்துக் கொண்டார். இது ஏன் என்று எனக்குப் புரியவில்லை.
பரிபூரணம்!

வீடு வந்து சேர்ந்ததும் சுவாமிகள் செயல் எனக்கு வினோதமாக இருந்தது. அவருக்கு என் துணைவியார் இலை போட்டு சாப்பாடு பரிமாறினார். சுவாமிகள் சாப்பாட்டை தமது வலது கரத்தால் 3 முறை ஆசிர்வதித்து ”பரிபூரணம்” என்று இரு முறை சொன்னார். பிறகு அந்த உணவைப் பிசைந்து எனது குழந்தைகளுக்கு ஊட்டுமாறு சைகை செய்தார்.

குழந்தைகள் சாப்பிடுவதை பார்த்து விட்டு ”பரிபூரணம்” என்று சொல்லிவிட்டு எழுந்து விட்டார். இதை எல்லாம் நாங்கள் அதிசயமாக பார்த்துக் கொண்டு இருந்தோமே தவிர விளக்கம் கேட்கத் தோன்றவில்லை.

இதை தொடர்ந்து எங்கள் வீட்டில் நல்லதும் அதிசயமும் மாறி மாறி நடக்கத் தொடங்கியது.எனது மருமகன் சஞசீவிக்கு மின்சார இலாகாவில் வேலையில் சேர ஆர்டர் வந்தது. நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம். “மருமகனை வேலையில் சேர்த்து விட்டு வா“ என்று சுவாமிகள் எனக்குக் கட்டளையிட்டார்.

நானும் மாப்பிள்ளையும் சென்று திரும்ப 6 நாள் ஆகிவிட்டது. அந்த 6 நாட்களும் சுவாமிகள் ஆகாரம் எடுக்கவில்லை என்று மனைவி கூறினார். 7வது நாள் சமையல் அறையில் எனது மனைவி கஞ்சியை சுடச்சுட வடித்து வைத்து இருந்தார்.

சுவாமிகள் சமையல் அறைக்குச் சென்று ”கஞ்சியைக் கொடு” என்று கேட்டுள்ளார். ”சுவாமி கஞ்சி கொதிக்கின்றது” என்று சொல்ல கண் இமைக்கும் நேரத்தில் அந்த அதிசயம் நடந்துள்ளது. கஞ்சியை எடுத்து ”சுடச்சுட மடக்மடக்கென்று சுவாமிகள் குடித்து விட்டு காலி பாத்திரத்தைத் தரையில் வைத்தபோது மனைவி பதறிப் போய்விட்டார்.

கஞ்சி குடித்து முடித்த சுவாமிகள் என் மனைவியைப் பார்த்து ”கோடி கோடியாக இரு. நான் கோடி வருஷம் வாழ்வேன்” என்று கூறினாராம்.
நான் வீடு திரும்பியதும் மனைவி இதை என்னிடம் சொல்லி ஆச்சரியப்பட்டார். சுவாமிகளின் மகிமையை அவள் நேரடியாகத் தெரிந்து கொண்டது பற்றி எனக்கு பூரிப்பாக இருந்தது. மறுநாள் சுவாமிகள் தனுஷ்கோடிக்கு பயணமானார். ஏற்கனவே இருந்த அதே மேடையில் தவக்கோலத்தில் நிற்கத் தொடங்கி விட்டார்.

தொடரும்..










கைமேல் பலன்!
     அன்று சுவாமிகளைத் தரிசித்து விட்டு புரவிபாளையத்தை விட்டு கிளம்பிய போது மாலைப் பொழுது மறைந்து இருள் சூழத் தொடங்கி இருந்தது. அந்த இருள் நமது மனதில் புகவில்லை. அங்கு முன்னிலும் பிரகாசம்தான் இருந்தது.

Read more »



மலர்க்குவியல்!
      மல்லிகை, முல்லை, மரிக்கொழுந்து, சம்பங்கி என்று வகைவகையான மலர் மாலைகளும், எலுமிச்சங்கனிகளும், அவரது பாதார விந்தங்களில் குவிந்தபடி இருந்தன. இன்னொரு வினோதத்தையும் அங்கே கண்டு பூரிக்க முடிந்தது. நீண்ட நாளைக்குப்பின் நெருங்கிய உறவினரை காண வருவோர் பாசத்தோடு பட்சணங்கள் வாங்கி வருவார்கள் இல்லையா? அதைப்போல இங்கே சாக்லேட்டுகள், பொங்கல், ஜிலேபி, பழவகைகள், வீட்டில் பக்குவமாக சமைத்து எடுத்து வந்த பலகார வகைகள் போன்றவற்றை தாத்தா கொஞசம் சாப்பிடுங்கள் என்று உள்ளன்போடு ஊட்டிவிடும் பாங்கு. வேண்டாம் என்றால் அவர்கள் மனம் வேதனைப்பட்டு விடக்கூடாதே

Read more »



கோடி சுவாமிகள்

அக்கிரமங்கள்  எல்லை மீறும்போது இயற்கையைச் சீறவிட்டு புயல், பூகம்பம், வெள்ளப் பெருக்கு என்ற பெயரில் ஒட்டு மொத்தத் தண்டனையை அரங்கேற்றுவது இறைவன் செயல் என்பது மிகப்பலரது நம்பிக்கை.

  அந்த இறைவன் தன்னை நேரிடையாகக் காட்டிக் கொள்ளாவிட்டாலும் தேவ தூதர்களாக, மனிதத் தெய்வங்களாக அவதார புருஷர்களாக அகிலத்தை வலம் வரச் செய்யத் தவறியதே இல்லை. அதற்கு தேவ தூதர் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும்  கோடி சுவாமிகளை அடிக்கோடிட்டுக் காட்ட முடியும்.
  ஆன்மீக நாயகனை, அற்புதங்களின் நிலைக்களனை தரிசிக்கவும், அவரது உன்னதத் தன்மைகளை உலகுக்குப் பறைசாற்றவும் இந்தப் புனித பயணம் மேற்கொள்கிறோம்.
பசுமை
      கோவை மாநகரில் இருந்து தெற்கு திசை நோக்கி நமது பயணம் தொடங்குகிறது. நகர எல்லையைக் கடந்ததும் பசுமையின் ஏகபோகம் தொடங்கி விடுகிறது. தவழ்ந்து வந்த குளிர்ந்த காற்று நெஞ்சத்தை இதமாக்குகிறது. பொள்ளாச்சி சென்று அங்கிருந்து புரவிபாளையத்துக்கு பஸ் பிடிக்கிறோம்.     

வண்ணக்கோலம்!
      பழமைச் சிறப்பை மட்டும் அல்ல. அந்தக் கட்டிடம் கம்பீரத்தையும் பறைசாற்றத்  தவறவில்லை. அந்த ஒட்டு மொத்த அமைப்பில் ஓர் ஆழ்ந்த தெய்வீக அமைதி குடி கொண்டு இருந்தது. மாளிகைக் காம்பவுண்டுக்குள் ஒரு விசாலமான மைதானம். நாம் சென்றபோது அது பக்தர்களால் நிரம்பி இருந்தது.

கோடி சுவாமிகள்!
      கோடிசுவாமிகள் அனைத்தையும் கடந்தவர். நிகரில்லாதவர். அவரைப் பற்றி முழுமையாக அறியும் சக்தி யாருக்கும் இல்லை. அவரைச் சரணடைந்தவர்கள் குன்றென உயர்ந்து நிற்கின்றனர். அவரை வைத்து ஆதாயம் தேட எண்ணுவோர் காணாமல் போய் விடுகின்றனர்.                      
அய்யப்பன் சொன்ன தகவல்:
       நானும் அவர் பாதத்தில் கிடப்பவன்தான். எனக்கு இது வேண்டும், அது வேண்டும் என்று அவரிடம் கேட்டது இல்லை. ஆனால் விலை மதிக்க முடியாத நிம்மதியை  நிரந்தரமாக எனக்குக் கொடுத்துள்ளார்.
      மனிதனுக்கு இதை விட வேறு என்ன வேண்டும்? உண்மைதான். நிம்மதிக்காக ஏங்கித் தவிக்கும் மனித குலத்துக்கு அது மட்டும் நிரந்தரமாகி விட்டால் எண்ணற்ற பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்பட்டு விடுமல்லவா?

ஞானப்பார்வை
லட்சோப லட்சம் அன்பர்களின் இதயக் கோவிலில் குடி கொண்டிருக்கும் அந்த மனித தெய்வத்தை 10 அடி தூரத்தில் இருந்து பார்க்கிறோம். செக்கச் சிவந்த நிறம். சாந்தம் தவழும் தாத்தா முகம் அதிலே அடர்ந்த வெண் தாடி, மெய் சிலிர்க்கும் ஞானப்பார்வை.  மெய்யன்பருக்கு அபயம் அளித்து அரவணைக்கும் ஆழ்ந்த பரிவு இத்தனையும் சங்கமம் ஆன, அந்த ஆன்மீகப் பிழம்பு நமக்குள் ஏதோ ஒரு மாற்றத்தை தோற்றுவிக்கவே செய்தது.  

தொடரும்...




நீதிச்சாமி.

எனது பெயர் நீதிச்சாமி. 2007 October 11ல் எனது குடும்பம் கோடி தாத்தா மூலம் மறுஜென்மம் எடுத்தது. அன்று எங்களது குடும்பத்தினர் நான்கு பேருக்கும் 11-10-2007 பிறந்தநாள். அன்று முதல் எனது பெயர் கோடி நீதிச்சாமி. எனது குடும்பம் கோடிதாத்தாவின் ஆசி பெற்ற குடும்பமாக ஆகிவிட்டது.

தாத்தா விருப்பப்பட்டவர்களிடமிருந்து குறைந்தபட்சமாகவும் விருப்பமாகவும் ஆரஞ்சு மிட்டாய் வாங்கி தன் வாயில் போட்டு சுவைத்து விட்டு திரும்பவும் அவர்களிடமே கொடுத்து உண்ணும்படி கூறுவாராம். அதன்மூலம் அவர்களுக்கு பலநன்மைகளைச் செய்வாராம். இது உலகறிந்த உண்மை.

Read more »




·         



RAMANATHAN’S EXPERIENCE WITH KODI SWAMI: – PART – 1.

Dear Friends in Thatha Family,
Earlier I had registered some of my experiences with Thatha – in the “internet” which again I have noted hereunder. Also I have reproduced hereunder the earlier comments of a few devotees and my reply:

Kodi Thatha 

It may be the year 1992. During those period, “Thatha Kodeeshwara Swamy (Kodiswamy)” was in worldly physical form in the village Puravipalayam of Coimbatore District, TN State. One night (or early morning) at about 4.15 A.M, when I was meditating on Him -  with internally chanting His name - ‘Kodishwara', He appeared in front of me in his actual form and told me “I am your Guru'. Then He blessed me raising up His both hands. I replied ...internally...without external voice ...”Guruve Thunai”. This was not a dream or mental imagination. This happening is an absolute real and never be an illusionary appearance.  
Then at another occasion, after finishing His worldly physical form, at my sense of peculiar type of dream at about 6 A.M, He touched on my bottom of spinal guard and subsequently a divine kundalini current raised via my spinal guard and sprayed out of my centre part of ' Netri '. (for expressing my true & divine feeling, I did not mention the English translation word for ' Netri ').
At another occasion, after finishing His worldly physical form, at my stage of different type of dream at about 2.45 A. M , He appeared in front of me, in a form of Divine 'Aavi' - Out skirt Sketch which is “Parisuddha Aavi”' as said in the Divine Christianity. (for expressing my true & divine feeling, I did not mention the English translation word for 'Aavi').
RAMANATHAN, 'Kodiswamy illam', COIMBATORE 641107. 



Feeds